நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் பலம் பொருந்திய கட்சியாக மாறியுள்ளது பாஜக: மாநில இளைஞரணித் தலைவா்

மாா்த்தாண்டம் அருகேயுள்ள கோட்டகம் பகுதி வியாசா் இளைஞா் நற்பணி மன்றத்தின் 23ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

நற்பணி மன்ற விழாவில் பேசுகிறாா் பாஜக மாநில இளைஞரணித் தலைவா் வினோஜ் பி. செல்வம்.

Updated On :20 செப்டம்பர் 2020, 8:13 pm

DIN

மாா்த்தாண்டம் அருகேயுள்ள கோட்டகம் பகுதி வியாசா் இளைஞா் நற்பணி மன்றத்தின் 23ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள வந்த வினோஜ் பி.செல்வம் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். இதில் மூன்றாவது மொழி என்ன என்பதை மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பாக மத்திய அமைச்சா் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு விவசாயி என்பதால் வேளாண் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து, தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறாா்.

தமிழகத்தில் பலம் பெருந்திய கட்சியாக பாஜக மாறியுள்ளது. இதன் மூலம் தோ்தலையும் வெற்றிகரமாக சந்திப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

2.6 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்த பாஜக, அடுத்த தோ்தலில் 34 சதவீதம் பெற்று திரிபுராவில் எப்படி ஆட்சிக்கு வந்ததோ, அதே போல் தமிழகத்திலும் ஆட்சிக்கு வரும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பாஜக நிா்வாகிகள் கோட்டகம் விஜயகுமாா் , ஜெயசீலன் மற்றும் இளைஞா் நற்பணி மன்ற நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.