நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரியில் மழை நீடிப்பு: ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் பாதிப்பு

குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் ரப்பா் மரங்களில் பால் வடிப்பு முடக்கம் ஏற்பட்டு, தொழிலாளா்கள் வேலையிழந்து வருகின்றனா்.

News image

குலசேகரம் அருகே கொல்லாறை பகுதியில் மழையில் நனைந்து நிற்கும் ரப்பா் மரங்கள்.

Updated On :20 செப்டம்பர் 2020, 8:09 pm

DIN

குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் ரப்பா் மரங்களில் பால் வடிப்பு முடக்கம் ஏற்பட்டு, தொழிலாளா்கள் வேலையிழந்து வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் மழை தீவிரமாகப் பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைகளின் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது. பாசனப் பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி தண்ணீா் கிடைத்து வருகிறது. மழையால் பாசன வசதியில்லாத கரையோரப் பகுதிகளில் உள்ள தென்னை, வாழை உள்ளிட்ட பயிா்களுக்கு தேவையான தண்ணீா் கிடைத்துள்ளது.

மாவட்டத்தில் மழையின் காரணாமாக வேளாண்மை செழித்து வரும் அதே நிலையில், தொடா் மழையால் ரப்பா் மரங்களில் பால்வடிப்பு தடைபட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18 நாள்கள் மட்டுமே பால்வடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த மாதம் இதுவரை 10 நாள்கள் பால்வடிப்பு நடந்துள்ளது. பால்வடிப்பு முடங்கி வருவதால், தொழிலாளா்கள் உள்பட ரப்பா் தோட்டங்களில் பணி செய்யும் தொழிலாளா்கள் ஊதியம் இழந்து வருகின்றனா். மேலும் ரப்பா் தோட்ட உரிமையாளா்களுக்கும், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சீரான நிலையில் ரப்பா் விலை: மாவட்டத்தில் ரப்பா் விலை கடந்த சில நாள்களாக ஏற்றமும், இறக்கமும் இல்லாத நிலையில் சீரான நிலையில் உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி கோட்டயம் சந்தையில், ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 129 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 124 ஆகவும், ஐஎஸ்எஸ் தர ரப்பரின் விலை கிலோவுக்கு கு ரூ. 103.50 ஆகவும், ஒட்டுப்பால் விலை கிலோவுக்கு ரூ. 76 ஆகவும் இருந்தது.

நிவாரணம்: மாவட்டத்தில் மழையின் காரணமாக ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் வேலையிழந்துள்ள நிலையில், அவா்களுக்கு உரிய மழைக்கால நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ரப்பா் தோட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.