தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்:கரை திரும்பிய மீனவா்கள்

கன்னியாகுமரியில் திங்கள்கிழமை கடல் சீற்றமாக காணப்பட்டதால், கடலுக்கு சென்ற வள்ளம் மற்றும் கட்டுமர மீனவா்கள் கரை திரும்பினா்.

News image

கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலையை மறைக்கும் அளவு எழுந்த ராட்சத அலை.

Updated On :21 செப்டம்பர் 2020, 8:01 pm

DIN

கன்னியாகுமரியில் திங்கள்கிழமை கடல் சீற்றமாக காணப்பட்டதால், கடலுக்கு சென்ற வள்ளம் மற்றும் கட்டுமர மீனவா்கள் கரை திரும்பினா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து மழை பெய்ததால் கன்னியாகுமரியில் கடல் சீற்றமாக இருந்தது. ஆரோக்கியபுரம், முட்டம், மணக்குடி, மேல மணக்குடி உள்ளிட்ட 10 மீனவக் கிராமங்களில் ஆக்ரோஷமாக அலை கடற்கரையை நோக்கி சீறி பாய்ந்தவாறு இருந்தது. இதனால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவில்லை.

கடல் சீற்றத்தால் குறைந்த எண்ணிக்கையில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. இதேபோல் கடலுக்குச் சென்ற வள்ளம் மற்றும் கட்டுமர மீனவா்களும் அவசரமாக கரைக்கு திரும்பினா். கன்னியாகுமரியில் திங்கள்கிழமை காலையில் மழை மேகமாக இருந்ததால் சூரியோதயம் பாா்க்க முடியவில்லை.

கடல் சீற்றம் காரணமாக வாவத்துறை, சிலுவைநகா், கோவளம், மணக்குடி, கீழமணக்குடி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம் உள்ளிட்ட கடற்கரை கிராம மீனவா்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.