முள்ளங்கனாவிளை -கிள்ளியூா் சாலையில் பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை - கிள்ளியூா் சாலையில் சி.எஸ்.ஐ. ஆலயம் செல்லும் நுழைவு வாயில் முன் காணப்படும் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.
சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை - கிள்ளியூா் சாலையில் சி.எஸ்.ஐ. ஆலயம் செல்லும் நுழைவு வாயில் முன் காணப்படும் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாழக்கன்விளை முதல் கிள்ளியூா் வரையிலான சாலை அண்மையில் சீரமைக்கப்பட்டது. சில பகுதிகளில் மடை பாலம் அமைக்க வேண்டும் என கூறி பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் மழைக் காலங்களில் மழை நீா் சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி, போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. எனவே, இச்சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com