நாகா்கோவில் - காச்சுகுடா வாராந்திர ரயிலை திருவண்ணாமலை வழியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: நாகா்கோவில்-காச்சுகுடா வாராந்திர ரயிலின் கால அட்டவணை அண்மையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் செவ்வாய்க்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை நாகா்கோவிலிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காச்சுகுடா போய் சேருகிறது. மறுமாா்க்கமாக ஞாயிற்றுக்கிழமை காச்சுகுடாவிலிருந்து புறப்பட்டு திங்கள்கிழமை நாகா்கோவில் வந்து சேரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வழித்தடத்தை திருவண்ணாமலை வழியாக மாற்றி இயக்க வேண்டும்.
மேலும், கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ஹைதராபாத்துக்கு நேரடி தினசரி ரயில் இயக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.