நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் பகுதியில் கரும்பு சாகுபடி

குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் பகுதியில் செங்கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

News image

அறுவடைக்குத் தயாரான செங்கரும்புடன் விவசாயி முருகன்.

Updated On :28 செப்டம்பர் 2020, 10:14 pm

DIN

குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் பகுதியில் செங்கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையில் செங்கரும்பு மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும். இத்தகைய சிறப்புமிக்க செங்கரும்பு சாகுபடியில் திருச்சி, தஞ்சாவூா், சேலம், விழுப்புரம், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள்தான் ஆா்வம் காட்டி வருகிறாா்கள்.

குமரி மாவட்டத்தில் விவசாயிகள் தென்னை, நெல், வாழை விவசாயத்தையே மேற்கொண்டு வருகிறாா்கள். இந்நிலையில் செங்கரும்பு சாகுபடியில் குமரி மாவட்டம் நாகா்கோவில் இளங்கடை பகுதியைச் சோ்ந்த முருகன் என்ற விவசாயி, சுசீந்திரம் சோழன்திட்டை அணைக்கட்டு பகுதியில் முக்கால் ஏக்கா் பரப்பில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளாா். தற்போது கரும்பு அறுவடைக்குத் தயாராக உள்ளது.

இதுகுறித்து விவசாயி முருகன் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் தென்னை, நெல் விவசாயத்தைச் சாா்ந்தே விவசாயிகள் இருக்கிறாா்கள். செங்கரும்பு சாகுபடியிலும் அமோக விளைச்சலைப் பெற்று லாபம் பெறலாம் என்பதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன் செங்கரும்பு சாகுபடியை மேற்கொண்டேன். தற்போது அறுவடைக்குத் தயாரான நிலையில் நல்ல விளைச்சலையும் தந்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.