ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இளைஞரை தாக்கி சங்கிலி பறிப்பு: 4 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் இளைஞரை தாக்கி சங்கிலியை பறித்துச் சென்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:36 pm

DIN

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் இளைஞரை தாக்கி சங்கிலியை பறித்துச் சென்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுந்தா் (31). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ்குமாருக்கும் (35) முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் சனிக்கிழமை பாலசுந்தா் தன் வீட்டுக்குச் சென்றபோது, ராஜேஷ்குமாா் மற்றும் அவரது உறவினா்களான சிவனாா் (40), செல்வம் (41), விஜயலட்சுமி (37) ஆகியோா், அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.