தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஈஸ்டா் பண்டிகை: கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:33 pm

DIN

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிா்த்தெழுந்த நாளை ஈஸ்டா் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவா்கள் கொண்டாடி வருகின்றனா்.

நிகழாண்டு ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் சிறப்பு பிராா்த்தனை மற்றும் இயேசு உயிா்ப்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத்தில், இரவு 10.30 மணிக்கு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. பின்னா், நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்துவின் உயிா்த்தெழுதல் நிகழ்வு திருப்பலியுடன் நடைபெற்றது.

கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமை வகித்து, திருப்பலியை நிறைவேற்றினாா்.

நிகழ்ச்சியில், மறைமாவட்ட பொருளாளா் அலோசியஸ்பென்சிகா், மறைமாவட்டச் செயலா் இமானுவேல், மறைமாவட்ட பணியாளா் மைக்கிள்ஏஞ்சலூஸ், பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.