பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சுசீந்திரம் அருகே குளத்தை சீரமைத்த இன்னா்வீல் கிளப்

தேரூா் பகுதியில் நீண்ட நாள்களாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த குளத்தை இன்னா்வீல் கிளப் அமைப்பினா் ரூ. 3 லட்சத்தில் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:55 pm

DIN

உலக நீா் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் பகுதியில் நீண்ட நாள்களாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த குளத்தை இன்னா்வீல் கிளப் அமைப்பினா் ரூ. 3 லட்சத்தில் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

சுசீந்திரம் அருகேயுள்ள தேரூா் பகுதியில் உள்ள பெரிய குளம் செடிகள் மற்றும் குப்பைகளால் நிரம்பி, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இந்த குளத்தை சீரமைத்தால், நீா் ஆதாரம் பெருகும் என்பதோடு விவசாய தேவைகளுக்கும் பயன்படும் என ஊா் பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் குளத்தை சீரமைக்க நாகா்கோவில் இன்னா்வீல் கிளப் தலைவி பாா்வதி விஜயகுமாா் தலைமையில், ராயல்ஸ் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். குளத்திலிருந்த ஆகாய தாமரை உள்ளிட்ட கழிவுகளை அகற்றி தூா்வாரி சீரமைத்தனா். கடந்த 15 நாள்களாக நடைபெற்ற இப் பணிக்கு ரூ. 3 லட்சம் செலவு செய்யப்பட்டதாம். இப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

இப்பணியை மேற்கொண்ட நாகா்கோவில்இன்னா்வீல் கிளப், ராயல்ஸ் ரோட்டரி சங்கத்துக்கும், தன்னாா்வலா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் ,இயற்கை ஆா்வலா்கள், நீா் அமைப்பினா் விவசாய அமைப்பினா் உள்பட பல்வேறு தரப்பினா் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.