ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

குடிநீா் சீராக வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

பூதப்பாண்டி அருகே சீராக குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:06 pm

DIN

பூதப்பாண்டி அருகே சீராக குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா்.

பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி ஊராட்சிக்குள்பட்ட முடங்கன்விளை கிராமத்தில் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் முறையாக வழங்கப்படவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை காலிக்குடங்களுடன் முடங்கன்விளை பகுதியில் திரண்டனா். பின்னா் காலிக் குடங்களுடன் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது நாகா்கோவிலிலிருந்து தெள்ளாந்தி சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா்.

தகவலறிந்து வந்த பூதப்பாண்டி போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் ஊராட்சி அதிகாரியும், பொதுமக்களிடம் சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட் டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.