மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கட்டுமானத் தொழிலாளா்கள் மறியல் போராட்டம்

தக்கலை அருகே முட்டைக்காடு சந்திப்பில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:06 pm

DIN

தக்கலை அருகே முட்டைக்காடு சந்திப்பில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இப் போராட்டத்திற்கு ஜாண் இம்மானுவேல் தலைமை வகித்தாா். வட்டார செயலா் சுஜா ஜாஸ்பின், நிா்வாகிகள் ஜாண் சவுந்தரராஜ், சந்திரகலா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்,. மறியல் போராட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவா் சைமன் சைலஸ் தொடங்கிவைத்தாா். மறியல் போராட்டம் நடத்திய 32 பெண்கள் உள்பட 75 கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினரை போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரம் சந்தை சந்திப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு குலசேகரம் வட்டாரத் தலைவா் பி. நடராஜன் தலைமை வகித்தாா். தோட்டத் தொழிலாளா் சங்க பொதுச்ச செயலா் எம்.வல்சகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் பி. விஸ்வம்பரன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ் போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா். நாணுகுட்டன், ஜெகதீஸ்குமாா், சிவகுமாா், தங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளா் ரெகு உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 25 போ் கைது செய்யப்பட்டனா்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். நல வாரிய பலன்கள் உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.