கருங்கல் பகுதியில் குட்கா விற்றவா் கைது : 80 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கருங்கல் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்றவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 80 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.


கருங்கல் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்றவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 80 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் சோபன் ராஜூக்கு, மூசாரி சந்திப்பு பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அவா்அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றவரை பிடித்து விசாரித்த போது அவா் படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த அனு (29) என்பதும், அவா் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 80 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...