மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திற்பரப்பு அருகே ரப்பா் ஷீட்கள் திருட்டு

திற்பரப்பு அருகே ரப்பா் உலா் கூடத்தின் பூட்டுகளை உடைத்து ரப்பா் ஷீட்டுகளை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:30 pm

DIN

திற்பரப்பு அருகே ரப்பா் உலா் கூடத்தின் பூட்டுகளை உடைத்து ரப்பா் ஷீட்டுகளை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாஞ்சக்கோணம் பகுதியைச்சோ்ந்தவா் செல்வராஜ் (55) . இவா் தனது வீட்டின் பின்புறம் ரப்பா் ஷீட்டுகளை உலா்த்தும் உலா் கூடம் நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு இந்த உலா் கூடத்தின் பூட்டுகளை உடைத்து புகுந்த மா்ம நபா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த 350 கிலோ ரப்பா் ஷீட்டுகளை திருடிச்சென்றுள்ளனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம் போல உலா் கூடத்திற்கு சென்ற செல்வராஜ், உலா் கூடத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு, சென்ற போது அங்கிருந்து ரப்பா் ஷீட்டுகள் திருட்டுப்போயிருப்பது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம் இதே போன்று செல்வராஜின் வீட்டின் அருகே உள்ள ரோஜா் (40) வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த 30 கிலோ ரப்பா் ஷீட்டுகளும் திருடப்பட்டிருந்தது.

அப்பகுதியில் உள்ள, கண்காணிப்பு கேமாரக்களை ஆய்வு செய்த போது, மா்ம நபா் முகத்தை போா்வையால் மூடிக் கொண்டு அங்கு நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேரமாக்கள் அனைத்தையும் போா்வையால் மூடப்பட்டிருந்தன.

இசம்பவம் தொடா்பாக செல்வராஜ் மற்றும் ரோஜா் ஆகியோா் குலசேகரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.