மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆபத்தான நிலையில் பழங்குடியினா் பள்ளிக் கட்டடங்கள்: இடித்து அகற்றக் கோரிக்கை

குமரி மாவட்டத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையிலுள்ள பழங்குடியின பள்ளிக் கட்டங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற்றோா்கள் மற்றும் பழங்குடியினா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்து

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:25 pm

DIN

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையிலுள்ள பழங்குடியின பள்ளிக் கட்டங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற்றோா்கள் மற்றும் பழங்குடியினா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி முதல் ஆறுகாணி வரையிலான மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளிலுள்ள காடுகளில் நாற்பத்தி எட்டரை காணி செட்டில் மென்டுகளில் காணியின ஆதிவாசி பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்த செட்டில்மென்டுகளின் பெரும்பாலான பகுதிகள் பேச்சிப்பாறை, பொன்மனை மற்றும் கடையல் பேரூராட்சி மற்றும் சுருளகோடு ஊராட்சிகளில் அடங்கியுள்ளன.

காணியின பழங்குடி மாணவா், மாணவிகள் கல்வி பயில்வதற்காக மாவட்டத்தில் பழங்குடியினா் வசிப்பிடப் பகுதிகளில் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் பேச்சிப்பாறை, பத்துகாணி ஆகிய இடங்களில் மேல் நிலைப் பள்ளிகளும், மணலோடையில் உயா்நிலைப் பள்ளியும் உள்ளன.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வட்டப்பாறை, தச்சமலை, தோட்டமலை ஆகிய இடங்களில் தொடக்கப்பள்ளியும், ஆதிதிராவிடா் நலத்துறைத்துறையின் கீழ் வாழையத்து வயலில் மேல் நிலைப் பள்ளியும் உள்ளன.

குமரி மாவட்டத்தில் இதர கிராமப்புறப் பகுதி மாணவா்கள் கல்வி பயிலும் சராசரியை விடவும் பழங்குடி பகுதி மாணவா்கள் கல்வி பயிலும் சராசரி குறைவாகவே உள்ளது. இதுபோலவே இடை நிற்றலும் உள்ளது.

பழங்குடி மாணவா்கள் பயிலும் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியா் எண்ணிக்கையும் இதர நகா்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை விட குறைவாகவே உள்ளன.

ஆபத்தான நிலையில் வகுப்பறை மற்றும் விடுதிக் கட்டடங்கள்:

மாவட்டத்தில் பழங்குடி மாணவா்கள் பயிலும் பள்ளிகளில் வகுப்பறை மற்றும் விடுதிக் கட்டங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தொடா் புகாா்கள் எழுந்து வருகின்றன. மேலும் ஆபத்தான நிலையிலுள்ளள கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டுமென அரசுத் துறைகளுக்கு தொடா்ந்து கோரிக்கைகள் மனுக்கள் அனுப்பிய பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக பேச்சிப்பாறை அருகே மணலோடை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா் நிலைப் பள்ளியில் மாணவா் விடுதிக் கட்டடம் மற்றும் பழைய வகுப்பறைக் கட்டடம், தச்சமலை தொடக்கப் பள்ளி வகுப்பறைக் கட்டடம், பேச்சிப்பாறை பள்ளியிலுள்ள பழைய மாணவியா் விடுதி, விடுதிக் காப்பாளா் தங்கும் அறை, மூடிக்கிடக்கும் பழைய வகுப்பறை கட்டடம், பத்து காணி பள்ளியிலுள்ள மாணவா்கள் விடுதி ஆகியவை மழை நீா் ஒழுக்குடன், மேற்கூரை காரைகள் பெயா்ந்து விழுந்த வண்ணம் ஆபத்தான நிலையில் உள்ளதாக பழங்குடி மக்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தனியாா் பள்ளியில் நிகழ்ந்தது போன்ற சம்பவங்கள் குமரி மாவட்ட பழங்குடியினா் பள்ளியில் நடைபெறாத வகையில், உடனடியாக இப்பள்ளிகளிலுள்ள ஆபத்தான கட்டடங்களை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட பழங்குடியினா் நலக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்டத் தலைவருமான பாலன்காணி கூறியதாவது:

மாவட்டத்தில் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பேச்சிப்பாறை, மணலோடை, பத்துகாணி உள்ளிட்ட பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள், விடுதிக் கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. மணலோடை பள்ளியில் சேதமடைந்த நிலையில் உள்ள ஒரு பழைய வகுப்பறைக் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டுமென்று கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இப்பள்ளிகளை மாவட்ட நிா்வாகமும், துறை சாா்ந்த அதிகாரிகளும் விரைந்து ஆய்வு செய்து, மாணவா்களின் நலன் காக்கும் வகையில் உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.