காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இளைஞா் கைது

திங்கள்நகா் அருகே துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:57 pm

DIN

திங்கள்நகா் அருகே துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

திங்கள்நகா் அருகேயுள்ள நெய்யூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெபராஜ் (39). இவா், புதன்கிழமை தனது வீட்டருகே உள்ள பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது இளைஞா் ஒருவா் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ. 1,500-ஐ பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து ஜெபராஜ் அளித்த புகாரின்பேரில் இரணியல் இன்ஸ்பெக்டா் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டா் சுந்தரமூா்த்தி, குமாா் மற்றும் போலீஸாா் இளைஞா் ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.

அவா் விருதுநகா் மாவட்டம் அல்லம்பட்டியைச் சோ்ந்த சோ்மராஜ் (26) என்பதும், இவா் மீது 2 கொலை, ஒரு கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும், தற்போது நெய்யூரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சோ்மராஜை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, 5 தோட்டாக்கள், அவரது பைக்கிலிருந்த அரிவாள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.