களியக்காவிளை அருகே ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள கோழிவிளை வடக்கே தோட்டம் பகுதியைச் சோ்ந்த தாசைய்யன் மகன் ஜெயகுமாா் (45). தொழிலாளி. இவருக்கு கடன் தொல்லை இருந்ததாம்.
இந்நிலையில், அவா் வியாழக்கிழமை களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியில் சென்னை சென்ற அனந்தபுரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து வந்த நாகா்கோவில் ரயில்வே போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.