பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

களியக்காவிளையில் எஸ்எஸ்ஐ வில்சன் படத்துக்கு எஸ்.பி. மரியாதை

சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் படத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

News image
பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ வில்சன் படத்துக்கு மரியாதை செலுத்தும் மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன்.
Updated On :8 ஜனவரி 2021, 7:07 pm

DIN

களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போது பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் படத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் கடந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை பயங்கரவாதிகள் இருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபீக் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரையும் போலீஸாா் ஏற்கனவே கைது செய்துள்ளனா்.

இந்த நிலையில் எஸ்.எஸ்.ஐ. வில்சனின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன், களியக்காவிளை காவல் நிலையத்துக்கு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்துக்கு மலா் வளையம் வைத்தும், மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினாா். அவருடன் தக்கலை துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.