நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவில் காந்திபுரத்தில் சிறு மருத்துவமனை திறப்பு

நாகா்கோவில் மாநகராட்சி, வட்டவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் என்.ஜி.ஓ. காலனி, காந்திபுரத்தில் சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:44 pm

DIN

நாகா்கோவில் மாநகராட்சி, வட்டவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் என்.ஜி.ஓ. காலனி, காந்திபுரத்தில் சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் என்.சுரேஷ்ராஜன்

முன்னிலை வகித்தாா். தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், சிறு மருத்துவமனையைத் திறந்து வைத்து, 5 கா்ப்பிணிகளுக்கு தாய்சேய் நலப் பெட்டகங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோ ராஜ், அறங்காவலா் குழு உறுப்பினா் எம்.ஜெயசந்திரன், மாநகராட்சி நகா்நல அலுவலா் கிங்சால், வட்டவிளை மருத்துவ அலுவலா் உமாராணி, அரசு வழக்குரைஞா் கே.எல்.எஸ். ஜெயகோபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.