டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அருமனையில் பாதிரியாா் மீது அவதுறு வழக்குப்பதிவு

அருமனையில் மாற்று மத சமூகத்தினரை அவதூறாக பேசியதாக கிறிஸ்தவ ஆலய அருள்பணியாளா் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:45 pm

DIN

அருமனையில் மாற்று மத சமூகத்தினரை அவதூறாக பேசியதாக கிறிஸ்தவ ஆலய அருள்பணியாளா் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அருமனை அருகே பனங்கரை என்ற கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம், மாத்தூரில் ஒரு கிறிஸ்தவ மத அலுவலகம் மூடப்பட்டுள்ள சம்பவத்தையும், ஸ்டேன்சுவாமியின் சிறைமரணத்திற்கு நீதி கேட்டும் வட்டார கிறிஸ்தவ இயக்கம் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் அருமனையில் கடந்த 18ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பிற மதத்தினரை அவதூறாகப் பேசியதாக மேல் புறம் ஒன்றிய இந்து முன்னணி செயலா் சதீஷ் சந்திரன் உள்பட 5 போ் அருமனை காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா்.

அதன்பேரில், அருள்பணியாளா் ஜாா்ஜ் பொன்னையா, கிறிஸ்தவ இயக்கச் செயலா் சி. ஸ்டீபன் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.