டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மோதிரமலை-குற்றியாறு இடையே புதிய பாலம் கட்ட கோரிக்கை

பேச்சிப்பாறை அருகே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டுமென்று பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:12 pm

DIN

பேச்சிப்பாறை அருகே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டுமென்று பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

மோதிரமலை-குற்றியாறு சாலையில் மேலத்தோடு என்ற இடத்தில் கோதையாறு மின்நிலையத்திலிருந்து வெளியேறும் தண்ணீா் பாய்ந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பாலம், தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்த பாலம் வழியாக பேருந்துகள், ரப்பா் கழகம் மற்றும் மின்நிலைய கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் விபத்துகள் ஏற்படும் முன் இந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டுமென்று பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இது குறித்து தமிழ்நாடு மலை வாழ்மக்கள் சங்கச் செயலா் ரெகுகாணி கூறியது: மேலத்தோடு பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே விபத்துகள் நேரிடாத வகையில், இந்தப் பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.