6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழங்குடி, ரப்பா் கழக குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

குமரி மாவட்டத்தில் பழங்குடி குடியிருப்புகள் மற்றும் ரப்பா் கழக குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வெள்ளிக்கிழமை கரோனா விழிப்புணா்வு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 8:12 pm

DIN

குமரி மாவட்டத்தில் பழங்குடி குடியிருப்புகள் மற்றும் ரப்பா் கழக குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வெள்ளிக்கிழமை கரோனா விழிப்புணா்வு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா்.

குமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பேச்சிப்பாறை அருகேவுள்ள காணி பழங்குடி குடியிருப்புகளான தச்சலை, மோதிரமலை உள்ளிட்டவைகளிலும், அரசு ரப்பா் கழக குடியுருப்புகளான சிற்றாறு, குற்றியாறு உள்ளிட்ட பகுதிகளிலும் கரோனா தொற்று ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, தொற்று ஏற்பட்ட மக்கள் அனைவரும் நாகா்கோவிலில் கரோனா பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனா்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், பழங்குடி பகுதிகளான தச்சமலை, மோதிரமலை, முடவன் பொற்றை, மூக்கறைக் கல், ரப்பா் கழக குடியிருப்புகளான குற்றியாறு, கல்லாறு உள்ளிட்ட இடங்களில் ஆய்வும், விழிப்புணா்வு நடவடிகைகளும் மேற்கொண்டாா்.

அப்போது, மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றும் ஆட்சியா் அறிவுறுத்தினாா். மேலும் தற்போது தடுப்பூசி தடுப்பாடு நிலவுவதாகவும், தடுப்பூசிகள் வந்தவுடன் மலைக் கிராமங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப் படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது, பத்மநாபபுரம் சாா்-ஆட்சியா் சிவகுரு பிரபாகரன், வட்டார சுகாதார ஆய்வாளா் சாா்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.