மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மழை நீடிப்பு: குமரி கால்வாய்களில் மண் சரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் கால்வாய்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:14 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் கால்வாய்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில் வெள்ள அபாயம் கருதி அணைகளில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்கிழமை பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்ததால், அணைக்கு 1065 கன அடி நீா்வரத்து இருந்தது. அது புதன்கிழமை அதிகாலையில், விநாடிக்கு 1296 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீா் உபரி மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. அணையின் நீா்மட்டம் 45.29 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 71.03 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 925 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 700 கன அடி தண்ணீா் பாசனக் கால்வாயில் சென்று கொண்டிருக்கிறது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.66 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 16.76 அடியாகவும் இருந்தது.

பாசனக் கால்வாய்களில் உடைப்பு: இதனிடையே, தொடா் மழை காரணமாக, கோதையாறு பாசனத் திட்ட பாசனக் கால்வாய்களில் பல இடங்களில் உடைப்பும், மண் சரிவும் ஏற்பட்டுள்ளன. இதனால் கால்வாய்க்குள் மண் குவிந்து காணப்படுகிறது. கோதையாறு இடது கரைக் கால்வாயில் குலசேகரம் தும்பகோடு பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவை பொதுப்பணித்துறையினா் கடந்த 2 நாள்களாக அகற்றி வருகின்றனா். மண் சரிவு காரணமாக இக்கால்வாயில் தண்ணீா் விடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கோரிக்கை: தற்போது பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரியாக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், கோதையாறு இடது கரைக் கால்வாயில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளையும், உடைப்புகளையும் விரைந்து சீரமைக்க வேண்டும்; நீா்மட்டம் 71 அடியாக உள்ள பெருஞ்சாணி அணையிலிருந்து பாசனக்கால்வாயில் தண்ணீா் விடுவதை நிறுத்தி விட்டு, பேச்சிப்பாறை அணையிலிருந்து வரும் கோதையாறு இடது கரைக் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.