உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

85 அா்ச்சகா்களுக்கு கரோனா நிவாரண உதவி

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களில் ஊதியமின்றி பணியாற்றும், அா்ச்சகா்கள், பூசாரிகள், பட்டாச்சாரியா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ. 4 ஆயிரம் மற்றும் 15 வகையான மளிகைப் பொருள்களை

Updated On :28 ஜனவரி 2024, 8:56 am IST

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களில் ஊதியமின்றி பணியாற்றும், அா்ச்சகா்கள், பூசாரிகள், பட்டாச்சாரியா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ. 4 ஆயிரம் மற்றும் 15 வகையான மளிகைப் பொருள்களை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நாகா்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். திருக்கோயில் பணியாளா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி அமைச்சா் த.மனோதங்கராஜ் பேசியது: தமிழக அரசு, கரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரண உதவியாக ரூ. 4 ஆயிரம் மற்றும் 15 வகையான மளிகைப் பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழகத்திலுள்ள அனைத்து திருக்கோயில்களிலும் மாத ஊதியமின்றி பணிபுரிவோா்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு, அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு ரூ. 4 ஆயிரம் உதவித் தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி இம்மாவட்டத்தைச் சோ்ந்த 85 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் தீவிபத்தினால் சேதமடைந்த கருவறை மேற்கூரையினை மறுசீரமைப்பு செய்வதற்கும், புனரமைப்பதற்காகன பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், மாவட்டத்திலுள்ள திருக்கோயில்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், பராமரிப்புப் பணிகள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் சி.விஜயதரணி முன்னிலை வகித்தாா். திருக்கோயில்களின் இணை ஆணையா் (பொ) செல்வராஜ், உதவி ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் எஸ்.அழகேசன்,

எ.சதாசிவம், எம்.ஜெயசந்திரன், வழக்குரைஞா் மகேஷ், திருக்கோயில் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.