மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் அளிப்பு

குலசேகரம் அருகே மங்கலத்தில் விவசாயிகளுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்களை தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:24 pm

DIN

குலசேகரம் அருகே மங்கலத்தில் விவசாயிகளுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்களை தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் வியன்னூா், அருவிக்கரை, பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளை சோ்ந்த மூன்று உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ. 15 லட்சம் மதிப்பில் முன்னேறிய வேளாண் கருவிகளான புல்வெட்டும் எந்திரம், பவா்வீடா் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டன. மேலும் தென்னங்கன்றுகள், நுண்ணூட்ட உரம் போன்றவைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநா் சத்தியஜோஸ், துணை இயக்குநா் அவ்வை மீனாட்சி, திருவட்டாறு உதவி இயக்குநா் சந்திரபோஸ், வட்டாட்சியா் ரமேஷ் மாவட்ட மக்கள் தொடா்புதுறை அலுவலா் ஜெகத் ஜாண்பிரைட், திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜான்சன் மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கு பின் அமைச்சா் மனோதங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், மழை மற்றும் வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு முதல் கட்ட நிவாரணம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு உள்ள இழப்பீடு குறித்து துறைரீதியாக பரிசிலித்து அரசு வழங்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.