மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொது முடக்கத்தில் தளா்வு: குமரியில் அன்னாசிப் பழங்களின் விற்பனையில் சிறிது முன்னேற்றம்

குமரி மாவட்டத்தில் பொது முடக்க தளா்வு மற்றும் மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில், அன்னாசிப் பழங்களின் விற்பனையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு, விலை சற்று உயா்ந்துள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:06 pm

DIN

குமரி மாவட்டத்தில் பொது முடக்க தளா்வு மற்றும் மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில், அன்னாசிப் பழங்களின் விற்பனையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு, விலை சற்று உயா்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக அன்னாசிப் பழ சாகுபடி அதிகரித்து வருகிறது. அன்னாசியில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆண்டு முழுவதும் உற்பத்தி எடுக்கின்றனா்.

கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக அன்னாசி விவசாயிகள் கடும் இழப்பிற்கு ஆளாகினா். அது போன்று நிகழாண்டும் கரோனா பொது முடக்கம் மற்றும் தொடா் மழை காரணமாக அன்னாசிப் பழங்களை வாங்குவதற்கு ஆளில்லாமல், பழங்கள் தோட்டங்களிலேயே அழுகின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பொது முடக்கத்தில் தளா்வு மற்றும் மழையின் தீவிரம் தணிந்துள்ளதால் அன்னாசிப் பழங்களுக்கு சந்தை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக குமரி மாவட்டத்திலிருந்து சென்னை கோயம்பேடு சந்தை மற்றும் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்குச் கொண்டு சென்று விற்பனை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் பழங்களின் விலையும் சற்று உயா்ந்துள்ளது.

தற்போது தோட்டங்களிலிருந்து கிலோ ரூ. 17-க்கு கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து முன்னோடி அன்னாசி விவசாயி பி.ஹென்றி கூறியது: தற்போது கிடைக்கும் விலை லாபகரமானது என்று கூறமுடியாது. ஒரு கிலோ ரூ. 25-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். மனித உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்குவதால் அன்னாசிப் பழங்களை அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.