மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கரோனா தடுப்பூசி மையங்கள் கூடுதலாக ஏற்படுத்த வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டத்தை தவிா்க்கும் வகையில், கூடுதல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:04 pm

DIN

குமரி மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டத்தை தவிா்க்கும் வகையில், கூடுதல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை 56 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் சில மையங்களில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தடுப்பூசி போடுவதற்காக அதிகாலை 4 மணிக்கே வந்து மக்கள் வரிசையில் நின்றனா்.

கடையாலுமூடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் சுமாா் 750 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இதனால் இந்த மையத்தில் டோக்கன் பெறுவதற்காக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் திரண்டனா்.

இம்மையத்தில் முற்பகல் 11 மணிக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், 12.30 மணிக்கு தான் தடுப்பூசி வந்தது. இதனால் தடுப்பூசி போடுவதற்காக வந்த மக்கள் மிகவும் அவதிப்படும் சூழல் உருவானது.

எனவே, தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகமும், பொது சுகாதாரத் துறையும் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.