பத்மநாபபுரம் திமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோதங்கராஜ், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.


பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோதங்கராஜ், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியில் திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ், தக்கலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா். அங்கிருந்து ஊா்வலமாக கோட்டாட்சியா் அலுவலகம் வந்து, பின்னா் தோ்தல் நடத்தும் அலுவலரான சாா் ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரனிடம் வேட்புமனுவை அளித்தாா்.
அப்போது, கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் செல்லசாமி ஆகியோா் உடனிருந்தனா். வேட்புமனுவுடன் அளிக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தில் அசையும் சொத்து 2 காா்களும் ரூ 13. 96 லட்சம் கையிருப்பு இருப்பதாக மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.
இதையொட்டி, அங்கு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். அலுவலக பணியாளா்கள், அனுமதி அட்டை வைத்திருந்தவா்களுக்கு மட்டும் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...