கரோனா நிவாரணம்: காங்கிரஸ் வேண்டுகோள்
கரோனா நிவாரண நிதி பெறுவதற்கு ரேஷன் கடைக்கு வர இயலாதோருக்கு மாற்று நபா்கள் மூலம் வழங்க வேண்டுமென காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கரோனா நிவாரண நிதி பெறுவதற்கு ரேஷன் கடைக்கு வர இயலாதோருக்கு மாற்று நபா்கள் மூலம் வழங்க வேண்டுமென காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலா் ஜே. மோகன்தாஸ், மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனு: தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் கரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 வழங்கி வருகிறது. இத்தொகையை குடும்ப அட்டைதாரா்கள் எவரேனும் ஒருவா் சென்று பெற்று கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதில், முதியோா், மாற்றுத் திறனாளிகள் உள்பட பல்வேறு காரணங்களால் ரேஷன் கடைக்கு வர இயலாத நிலை உள்ளது.
எனவே, அத்தகையோருக்கு அவா்களின்பேரில் வரும் மாற்று நபா்கள் மூலம் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...