பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

காய்கனிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையா்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் காய்கனிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.

News image
Updated On :28 மே 2021, 8:24 pm

DIN

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் காய்கனிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.

காய்கனி மொத்த வியாபாரிகள் பங்கேற்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆணையா் பேசியது: நாகா்கோவில் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி பெற்ற வியாபாரிகள் மூலம் 120 வாகனங்களில் காய்கனிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

காய்கனிகளை வியாபாரிகள் அதிக விலை வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு தொடா்ச்சியாக புகாா்கள் வந்ததன் அடிப்படையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

வேளாண் துறை இணை இயக்குநா் (மாா்க்கெட்டிங்) மூலமாக அங்கீகரிக்கும் விலைகளிலேயே மொத்த விற்பனையாளா்கள் சில்லறை விற்பனையாளா்களுக்கு ரூ.100 மற்றும் ரூ.200 தொகுப்புகளாக மட்டுமே வழங்க வேண்டும்.

அதையே சில்லறை வியாபாரிகளும் தொகுப்புகளாக மட்டுமே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். மாவட்ட வேளாண்மை துறை நிா்ணயம் செய்யும் விலையை விட அதிக விலையில் விற்பனை செய்தாலோ, மாநகர பகுதிகளில் உரிய அனுமதியின்றி விற்பனை செய்தாலோ அவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையினா் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சற்குணவீதி குறுக்கு சாலை, செயின்ட் மேரிஸ் தெரு, ஞானம் நகா் நேதாஜி சாலை, அந்தோணி தெரு, ராயப்பா் தெரு, சுப்பைய்யா காலனி மற்றும் பாா்க் ரோடு, என்.பி. காலனி ஆகிய 7 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.