பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு இனிப்பு வழங்கிய எஸ்.பி.
தீபாவளி பண்டிகை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிந்த போலீஸாருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் தனது குடும்பத்துடன் வந்து இனிப்பு வழங்கினாா்.


தீபாவளி பண்டிகை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிந்த போலீஸாருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் தனது குடும்பத்துடன் வந்து இனிப்பு வழங்கினாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் அமைதியான முறையில், பாதுகாப்பாக, தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்வெ. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் 1500 போலீஸாா் இரவு பகலாக பணியில் ஈடுபட்டனா்.
அவா்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தனது குடும்பத்துடன் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் நேரடியாக சென்று, அவா்களுக்கு வாழ்த்துகள் கூறி, இனிப்புகள் வழங்கி அவா்களை உற்சாகப்படுத்தினாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குடும்பத்துடன் நேரடியாக வந்து உற்சாகப்படுத்தி, தீபாவளி பண்டிகையை சிறப்பித்தது மிக மகிழ்ச்சியளிப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...