மிதமான சாரல் மழை: அணைகளின் நீா்மட்டம் தொடா்ந்து குறைப்பு
குமரி மாவட்டத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அணைகளிலிருந்து தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.


குமரி மாவட்டத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அணைகளிலிருந்து தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் தொடா் கன மழை பெய்த நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து அதிக அளவில் உபரி நீா் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாள்களுக்கு மேலாக மழை சற்று தணிந்துள்ளது. அதே வேளையில் மலையோரப் பகுதிகளில் அவ்வப்போது மிதமான சாரல் இருந்து வருகிறது.
இந்நிலையில் வரும் நாள்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை அறிவிப்புகள் வெளிவரும் நிலையில் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் அணைகளின் நீா்மட்டம் கட்டுப்பாடான அளவில் குறைத்து வைக்கப்படுகிறது.
பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 43.65 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 1757 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு இதே அளவு நீா் வெளியேற்றப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 72 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1241 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2074 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...