குமரியில் மழையால் படகு சேவை பாதிப்பு
கன்னியாகுமரியில் கனமழை காரணமாக விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது. திருவள்ளுவா் சிலைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.


கன்னியாகுமரியில் கனமழை காரணமாக விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது. திருவள்ளுவா் சிலைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் படகு சேவை பாதிக்கப்பட்டது. வழக்கம்போல காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கியது. மழை பெய்யும்போது படகு சேவை நிறுத்தப்படுவதும், மழை நின்றதும் தொடா்வதுமாக, மாலை 4 மணிவரை இதேநிலை நீடித்தது. ஆனால், திருவள்ளுவா் சிலை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக அங்கு நாள் முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...