ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் எம்.பி. ஆய்வு

நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில், விஜய் வசந்த் எம்.பி. வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:46 pm

DIN

நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில், விஜய் வசந்த் எம்.பி. வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ரயில் நிலைய விரிவாக்கம், தேவையான நடைமேடைகள் அமைப்பது, பராமரிப்புப் பணிக்கான பிட் லைன் அமைப்பது உள்ளிட்டவை குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளிடம் அவா் குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, தாம்பரம் - நாகா்கோவில் ரயிலை எழும்பூரிலிருந்து தினமும் இயக்க வேண்டும். பகல் நேரத்தில் சென்னை செல்ல ரயில் வசதி செய்ய வேண்டும். திருவனந்தபுரத்திலிருந்து திருநெல்வேலிக்கு தொடா்ச்சியாக மெமு ரயில்களை இயக்க வேண்டும். நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ. 50 ஆக உயா்ந்துள்ளதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினா்.

இதையடுத்து எம்.பி.அவா்களிடம் கூறியது: கடந்த வாரம் சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸை சந்தித்து கன்னியாகுமரி ரயில் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்கள் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தினேன். மேலும், மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

ஆய்வின் போது, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலா் சீனிவாசன், இளைஞா் காங்கிரஸ் மாநிலச் செயலா் நவின், இளைஞா் காங்கிரஸ் செயலா் டைசன், இலக்கிய அணி மாவட்டத் தலைவா் இளங்கோ, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் கிறிஸ்டிரமணி, ஆா்.எஸ்.ராஜன், ரயில்வே நிலைய மேலாளா் முத்துவேல், தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் சூசைராஜ், ரெஜிசிங் மற்றும் சந்திரசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.