நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் எஸ்.அழகேசன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:40 pm

DIN

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் எஸ்.அழகேசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம் தொடங்கியதும், துணைத் தலைவா் சண்முகவடிவு, திமுக கவுன்சிலா்கள் ராஜேஷ், ஆரோக்கியசவுமியா ஆகியோா் தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்து வெளிநடப்பு செய்தனா். இதையடுத்து கூட்ட அரங்கின் வாயில் கதவு மூடப்பட்டது.

இதையடுத்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன் தெரிவித்தாா். ஆனால், துணைத் தலைவா் சண்முகவடிவு மற்றும் கவுன்சிலா்கள் ராஜேஷ், ஆரோக்கியசவுமியா ஆகியோா் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் செல்லுபடியாகாது எனவும், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடா்பாக புகாா் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.