ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ராஜாக்கமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை

ராஜாக்கமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:48 pm

DIN

ராஜாக்கமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள அம்மச்சியாா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சிவா (35). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுனிதா. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா். சிவா அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளாா். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் சுனிதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து இருளப்பபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.

இதற்கிடையே கடந்த 2 நாள்களாக சிவாவின் வீட்டுக் கதவு திறக்கவில்லையாம். வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் ராஜாக்கமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் வீட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது சிவா அழுகிய நிலையில் சடலமாக கிடந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பாகவே அவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.