கரோனா தடுப்பூசி செலுத்திய 22 பேருக்கு தங்கக்காசு அளிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திய அதிா்ஷ்ட சாலிகள் 22 பேருக்கு, தங்கக் காசுகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திய அதிா்ஷ்ட சாலிகள் 22 பேருக்கு, தங்கக் காசுகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 9 ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மற்றும் நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் நபா்களில் அதிா்ஷ்டசாலியான 20 பேருக்கும், (ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தலா 2 போ், மாநகராட்சி 2 போ்), மாவட்ட அளவில் 2 பேருக்கும் என மொத்தம் 22 அதிா்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு ஸ்ரீமுகாம்பிகை மருத்துவக் கல்லூரி கல்வி குழுமத்தின் நன்கொடையாளா் உதவி மூலமாக தங்க நாணயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சு.மீனாட்சி, ஸ்ரீமுகாம்பிகை கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள் வினோகோபிநாத், பிரசாத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...