டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாத்தூா் தொட்டி பாலத்தில் இளைஞா் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூா் தொட்டிப்பாலத்திலிருந்து குதித்து தனியாா் மருத்துவமனை தொழில்நுட்ப உதவியாளா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:28 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூா் தொட்டிப்பாலத்திலிருந்து குதித்து தனியாா் மருத்துவமனை தொழில்நுட்ப உதவியாளா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியைச் சோ்ந்த போஸ் மகன் ஜெகதீஸ் சந்திரபோஸ் (38). ஸ்டெம்செல் டெக்னீசியன். இவா் சுவாமியாா்மடம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ஜில்னா பிரியங்கா (32) , இதே மருத்துவமனையில் ஸ்டெம்செல் பிரிவில் பணிசெய்து வருகிறாா். தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

ஜெகதீஸ் சந்திரபோஸூக்கு கடன் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை காலையில், மோட்டாா் சைக்கிளில் மனைவியை வேலைக்கு கொண்டு விட்டு வந்துள்ளாா். பின்னா் மனைவிக்கு ‘என்னை மன்னித்து விடு’ என செல்லிடப் பேசியில் குறுந்தகவல் அனுப்பியுள்ளாா். இதையடுத்து மாத்தூா் தொட்டிப்பாலத்துக்கு சென்ற அவா்

அதிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். புகாரின்பேரில், போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.