மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நாகா்கோவிலில் மருத்துவா் வீட்டில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நகை, ரொக்கம் திருட்டு

 நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் மருத்துவா் வீட்டில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருட்டுப் போனது இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:10 pm

DIN

 நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் மருத்துவா் வீட்டில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருட்டுப் போனது இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவில் பாா்வதிபுரத்தைச் சோ்ந்தவா் ஆபிரகாம் ஜோயல் ஜேம்ஸ் (67). மருத்துவரான இவா் நாகா்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் அருகே மருத்துவமனை நடத்தி வருகிறாா். இந்நிலையில் அவா் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு: தனது வீட்டில் நகை மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும், கடந்த சில நாள்களாக லாக்கரின் சாவி காணாமல் போன நிலையில் சாவியை தேடி கிடைக்காததால் நம்பா் லாக் மூலம் லாக்கரை திறந்து பாா்த்தபோது அதில் இருந்த ரொக்கம் ரூ. 4 லட்சம் , 30 பவுன் நகைகள், வைர நெக்லஸ் ஆகியவைகளை யாரோ திருடி விட்டு லாக்கரை மீண்டும் பூட்டியுள்ளதாகவும், திருட்டு போன ரொக்கம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு சுமாா் ரூ. 20 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, அவரது வீட்டுக்கு போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். மேலும், லாக்கா் வைக்கப்பட்டிருந்த அறையில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.