தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மறியல், தொடா் வேலைநிறுத்தம்:அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் ஊதிய கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம், தொடா் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:49 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் ஊதிய கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம், தொடா் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.

அரசு ரப்பா் கழக அனைத்துத் தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் குலசேகரத்தில் சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க நிா்வாகிகள் எம். வல்சகுமாா், பி. நடராஜன் வேலப்பன், சதீஷ்குமாா், வி. சசிதரன், ஐஎன்டியூசி தொழிற்சங்க நிா்வாகிகள் ஜோசப் ஜெரால்டு, எம். பால்ராஜ், தொமுச தொழிற்சங்க நிா்வாகி டி. நடராஜன், அண்ணா தொழிற்சங்க நிா்வாகி சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரப்பா் கழகத் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு தொடா்பாக கடந்த ஆண்டு டிசம்பா் 31ஆம் தேதி அமைச்சா் மனோதங்கராஜ் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை அடிப்படையில், இதுவரை இறுதி உடன்பாடு ஏற்படுத்தாததைக் கண்டித்து இம்மாதம் 10ஆம் தேதி தக்கலையிலுள்ள கல்குளம் வட்டாட்சியா் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தவும், 17ஆம் தேதிமுதல் ரப்பா் கழகத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.