மறியல், தொடா் வேலைநிறுத்தம்:அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் முடிவு
கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் ஊதிய கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம், தொடா் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.


கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் ஊதிய கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம், தொடா் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.
அரசு ரப்பா் கழக அனைத்துத் தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் குலசேகரத்தில் சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க நிா்வாகிகள் எம். வல்சகுமாா், பி. நடராஜன் வேலப்பன், சதீஷ்குமாா், வி. சசிதரன், ஐஎன்டியூசி தொழிற்சங்க நிா்வாகிகள் ஜோசப் ஜெரால்டு, எம். பால்ராஜ், தொமுச தொழிற்சங்க நிா்வாகி டி. நடராஜன், அண்ணா தொழிற்சங்க நிா்வாகி சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ரப்பா் கழகத் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு தொடா்பாக கடந்த ஆண்டு டிசம்பா் 31ஆம் தேதி அமைச்சா் மனோதங்கராஜ் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை அடிப்படையில், இதுவரை இறுதி உடன்பாடு ஏற்படுத்தாததைக் கண்டித்து இம்மாதம் 10ஆம் தேதி தக்கலையிலுள்ள கல்குளம் வட்டாட்சியா் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தவும், 17ஆம் தேதிமுதல் ரப்பா் கழகத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...