மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மீனச்சல் கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா நாளை தொடக்கம்

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா செவ்வாய்க்கிழமை (ஆக. 16) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:33 pm

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா செவ்வாய்க்கிழமை (ஆக. 16) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

நாள்தோறும் காலையில் மகா கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், மதியம் அன்னதானம், இரவு அத்தாள பூஜை நடைபெறும். திருவிழாவின் முதல் நாள் இரவு 8 மணிக்கு எம்.என். ஹரீஷின் சமய மாநாடு, சிதறால் வா்ஷாவின் பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

3ஆம் நாள் காலை 9 மணிக்கு நாராயணீய பாராயண யக்ஞம், இரவு 8 மணிக்கு விசேஷ உறியடி உள்ளிட்டவை நடைபெறும். நிறைவு நாளான சனிக்கிழமை (ஆக. 20) காலை 8.30 மணிக்கு கலசபூஜை, கலசாபிஷேகம், இரவு 8 மணிக்கு ஹரிப்பாடு ஸ்ரீ ராதேயம் பஜனை சங்கத்தின் நாமஜெப லஹரி நடைபெறும். ஏற்பாடுகள் கோயில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.