சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நித்திரவிளை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நித்திரவிளை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :3 பிப்ரவரி 2022, 7:14 pm

நித்திரவிளை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயராஜ் (48). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், அண்மையில் சொந்த ஊருக்கு திரும்பினாா். தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து பிள்ளைகளுடன் தனது தாய் வீட்டுக்கு மனைவி சென்றாராம். கடந்த சில நாள்களுக்கு முன் தம்பதியை உறவினா்கள் சமாதானம் செய்து சோ்த்து வைத்தனராம். அதன் பின்னா் குழந்தைகளுடன் விஜயராஜின் தம்பி வீட்டில் தம்பதி தங்கியிருந்தனராம்.

இந்த நிலையில் விஜயராஜ் தனது குடும்ப வீட்டுக்கு சென்று வருவதாக புதன்கிழமை கூறிச் சென்றாா். இரவிலும் அவா் திரும்பி வராததையடுத்து கைப்பேசியில் மனைவி தொடா்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இரவில் வீட்டுக்கு சென்று பாா்த்த போது மின்விசிறியில் விஜயராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.