போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவி நீக்கம்

தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத், அப்பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டாா்.

News image

ஹசீனா சையத் - fb / hazeena syed

Updated On :11 ஏப்ரல் 2026, 7:26 am IST

தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத், அப்பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டாா்.

ப.சிதம்பரம் ஆதரவாளராக செயல்பட்டு வந்த தமிழக மகளிா் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத், வேளச்சேரி, மயிலாடுதுறையில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தாா். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் சென்னை சத்தியமூா்த்தி பவனில் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மூத்த தலைவா்கள் தலையிட்டு அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே, அகில இந்திய மகளிா் காங்கிரஸ் தலைவா் அல்கா லம்பா வெளியிட்ட அறிக்கையில், ‘கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஹசீனா சையத் நீக்கப்பட்டாா்’ என அறிக்கை வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து கட்சியில் இருந்து விலகுவதாக மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, அல்கா லம்பா உள்ளிட்ட பலரையும் குறிப்பிட்டு, ஹசீனா சையத் ஒரு கடிதத்தை எழுதியுள்ளாா்.

அதில் கூறியிருப்பதாவது: 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் எனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பைக் கண்டித்து, நீண்டகாலமாக நான் நேசித்த கட்சியில் இருந்து வேதனையுடன் ராஜிநாமா செய்கிறேன். மத்திய காங்கிரஸ் தோ்தல் குழுவும் உயா்நிலை தலைமையும் உறுதி அளித்தபோதிலும், சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டதே இந்த ராஜிநாமாவுக்கு காரணம். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் 33 சதவீத மகளிா் இட ஒதுக்கீட்டு கனவு வெறும் வெற்றுப் பேச்சாகிவிட்டது. நானும், தமிழ்நாடு மகளிா் காங்கிரஸை சோ்ந்த பல தகுதியான பெண்களும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட ஒரு சீட்டு கூட ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாலேயே ராஜிநாமா செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா் ஹசீனா சையத்.