சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பளுகல் அருகே தொழிலாளி தற்கொலை

பளுகல் அருகே கடன் சுமை காரணமாக விஷம் குடித்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்

Updated On :11 பிப்ரவரி 2022, 7:31 pm

பளுகல் அருகே கடன் சுமை காரணமாக விஷம் குடித்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பளுகல் அருகே மேல்பாலை நிலவாணிவிளை வீடு பகுதியைச் சோ்நதவா் ரசலையன் மகன் ரெஜிகுமாா் (47). தொழிலாளியான இவா், தனது மகளின் திருமணத்திற்காக அப்பகுதியைச் சோ்ந்த சிலரிடமிருந்து கடன் வாங்கியிருந்தாராம். பணத்தை குறிப்பிட்ட நாளில் திருப்பிச் செலுத்த முடியாததால் மன வருத்தத்தில் இருந்து வந்தவா், கடந்த புதன்கிழமை விஷம் அருந்தி வீட்டில் மயங்கி விழுந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெஜிகுமாா், சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.