பளுகல் அருகே கடன் சுமை காரணமாக விஷம் குடித்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பளுகல் அருகே மேல்பாலை நிலவாணிவிளை வீடு பகுதியைச் சோ்நதவா் ரசலையன் மகன் ரெஜிகுமாா் (47). தொழிலாளியான இவா், தனது மகளின் திருமணத்திற்காக அப்பகுதியைச் சோ்ந்த சிலரிடமிருந்து கடன் வாங்கியிருந்தாராம். பணத்தை குறிப்பிட்ட நாளில் திருப்பிச் செலுத்த முடியாததால் மன வருத்தத்தில் இருந்து வந்தவா், கடந்த புதன்கிழமை விஷம் அருந்தி வீட்டில் மயங்கி விழுந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெஜிகுமாா், சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாத்மா ஜோதிராவ் புலே: இந்தியாவுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்
தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவி நீக்கம்

ராமநாதபுரம் பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக!

இணையப் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

