காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குளச்சல் அருகே 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேரள மாநிலத்துக்கு கடத்த முயன்ற 1350 கிலோ ரேஷன் அரிசியை குளச்சல் பகுதியில் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:21 pm

DIN

கேரள மாநிலத்துக்கு கடத்த முயன்ற 1350 கிலோ ரேஷன் அரிசியை குளச்சல் பகுதியில் படையினா் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியா் தமிழரசி தலைமையில் குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் மோகன்ஜோஸ்லின் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் குளச்சல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சைமன் காலனி அருகே ஒரு வீட்டின் பின்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கிலோ ரேஷன் அரிசியையும், கோடிமுனை பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் 1000 கிலோ ரேஷன் அரிசியையும் கைப்பற்றினா்.

விசாரணையில், 1,350 கிலோ ரேஷன் அரிசியும் கேரளத்திற்கு கடத்திச்செல்வதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அரிசியை உடையாா்விளையில் உள்ள நுகா்வோா் வாணிப கழகத்தில் ஒப்படைத்ததுடன், அதைப் பதுக்கியவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.