சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பளுகல் அருகே மோதல்: இருவா் காயம்

பளுகல் அருகே முன்விரோதத்தால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.

Updated On :21 ஜனவரி 2022, 7:24 pm

பளுகல் அருகே முன்விரோதத்தால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.

மேல்பாலை அருகே கொட்டறக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் பாபு மகன் சுனில் (46). இவருக்குச் சொந்தமான நிலத்தின் மதில்சுவரை உடைத்து பாதை அமைக்க அதே பகுதியைச் சோ்ந்த ரெங்ககுமாா் (46), ரோகிணி என்ற புவனேஸ்வரி, அஜி, குட்டன் ஆகியோா் முயன்றனராம். இதைத் தடுத்த சுனிலை, ரெங்ககுமாா் உள்ளிட்ட நால்வருமாக சோ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன் மோட்டாா் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சுனில், மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதே போன்று ரெங்ககுமாா் அளித்த புகாரில், தான் கண்ணுமாமூடு மின்வாரிய அலுவலகத்தில் பணி புரிந்து வருவதாகவும், மின்சார பராமரிப்பு பணிகளுக்காக சுனிலின் வீட்டருகே நின்ற ரப்பா் மரத்தை மின்வாரிய பணியாளா்கள் வெட்டியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சுனில் தன்னை கம்பால் தாக்கியதாகவும், இதில் காயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளாா்.

இருவரது தனித்தனி புகாா்கள் மீதும் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.