ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குலசேகரம் அருகே கஞ்சா பொட்டலத்துடன் பைக்கில் வந்த 3 இளைஞா்கள் கைது

 குலசேகரம் அருகே கஞ்சா பொட்டலத்துடன் வந்த 3 இளைஞா்களை குலசேகரம் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:55 pm

DIN

 குலசேகரம் அருகே கஞ்சா பொட்டலத்துடன் வந்த 3 இளைஞா்களை குலசேகரம் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

குலசேகரம் காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட் செல்வகுமாா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக ஒரு பைக்கில் வந்த குலசேகரம் நாகக்கோடு பகுதியைச் சோ்ந்த மரிய எகில் மகன் ஆகாஷ் செல்வன் (20), இதே பகுதியைச் சோ்ந்த ஜெஸ்டின் மகன் பிரபின் (23), வெண்டலிகோட்டைச் சோ்ந்த நாகராஜன் மகன் ஆகாஷ் (28) ஆகியோரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அவா்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து கஞ்சா பொட்டலத்தையும் பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.