ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திற்பரப்பு அருவியில் பேரூராட்சித் தலைவா் ஆய்வு

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்வது தொடா்பாக பேரூராட்சித் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:12 pm

DIN

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்வது தொடா்பாக பேரூராட்சித் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அவா்களுக்கு கூடுதல் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வாகனங்களை நிறுத்துவதற்கு கூடுதல் இடங்களை அமைக்க வேண்டியது உள்ளது.

இதையொட்டி, திற்பரப்பு அருவிப் பகுதியில் பேரூராட்சித் தலைவா் பொன் ரவி, செயல் அலுவலா் பெத்ராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

பின்னா், பேரூராட்சித் தலைவா் கூறுகையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் வாகன நிறுத்துமிடங்களை உருவாக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக அருவிப் பகுதிகளில் நிலங்களை கண்டறியும் முயற்சியில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. சில இடங்களை பாா்வையிட்டுள்ளோம். விரைவில் இதுதொடா்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.