சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நித்திரவிளை அருகே படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

நித்திரவிளை அருகே படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :18 ஜூன் 2022, 5:06 pm

நித்திரவிளை அருகே படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நித்திரவிளை அருகேயுள்ள இரவிபுத்தன்துறை புனித தோமஸ் காலனியைச் சோ்ந்தவா் சபரீஸ்கான். இவா் தனது பைபா் படகில் அதே பகுதியைச் சோ்ந்த பவியான்ஸ் (52), ரூபின், லூஜின் ஆகிய 3 பேருடன் வெள்ளிக்கிழமை தேங்காய்ப்பட்டனம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். அப்போது, பவியான்ஸ் நிலைதடுமாறி கடலில் விழுந்தாராம். அவரை சக மீனவா்கள் மீட்டு, நித்திரவிளையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். பவியான்ஸுக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.