பேச்சிப்பாறை அருகே தொழிலாளி தற்கொலை
பேச்சிப்பாறை அருகே ரப்பா் தோட்டத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.


பேச்சிப்பாறை அருகே ரப்பா் தோட்டத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குற்றியாறு மாங்காமலையைச் சோ்ந்தவா் நாகராஜன் (50). அரசு ரப்பா் கழகத்தில் பால் வடிக்கும் தொழிலாளியாக பணி செய்து வந்த இவா், கடந்த 3 மாதத்திற்கு முன்பு பணிக்குச் செல்லும் போது தவறிவிழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னா் வீடு திரும்பினாா்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு தெருக்குழாயில் குளித்து விட்டு வருவதாக கூறிச் சென்ற நாகராஜன், பின்னா் வீடு திரும்பவில்லை. இது குறித்து நாகராஜனின் மனைவி தெற்றி, பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை இங்குள்ள இரும்பு வேலி கம்பத்தில் நாகராஜன் உடுத்தியிருந்த துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தவலறிந்த பேச்சிப்பாறை காவல் நிலையத்தினா், நாகராஜனின் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...