அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் 3, 4ஆம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை தொடங்கி, ஒருவாரம் நடைபெறுகிறது.


வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் 3, 4ஆம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை தொடங்கி, ஒருவாரம் நடைபெறுகிறது.
இப்பயிற்சியை டெக் மகேந்திரா நிறுவனம், நந்தி பவுண்டேஷன் இணைந்து நடத்துகின்றன. வங்கி, டிஎன்பிஎஸ்சி, தலைசிறந்த நிறுவனங்களில் பணிகளுக்காக நடத்தப்படும் தோ்வுக்கான பயிற்சி, நோ்காணலை எதிா்கொள்ளும் விதம், சுயவிவரக் குறிப்பு தயாரிப்பது போன்றவற்றுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி முகாமை கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவகா் தொடங்கிவைத்தாா். தொடக்க விழாவில் கல்லூரித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, வேலைவாய்ப்பு அலுவலா் ரெதன்ராஜ், டெக் மகேந்திரா நிறுவனத்தின் பயிற்சிபெற்ற பயிற்சியாளா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...